சுதந்திர தின விழாவில் பங்கேற்க பொதுமக்களுக்கு அனுமதி இல்லை: தென்காசி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

தென்காசி: சுதந்திர தின விழாவில் பங்கேற்க பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என தென்காசி மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். தென்காசி: தென்காசி மாவட்டத்தில் வருகிற 15ஆம் தேதி சுதந்திர தின விழா கொண்டாடுவது தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. தமிழக அரசின் விதிமுறைகளின்படி தென்காசி இ.சி.ஈஸ்வரன்பிள்ளை பள்ளி மைதானத்தில் வருகிற 15-ம் தேதி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட உள்ளது.

விழாவுக்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை காவல்துறையினர் மேற்கொள்ள வேண்டும். விழாவில் பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்க அனுமதி கிடையாது. காவல்துறை மரியாதை தொடர்பான பயிற்சிகளை காவல்துறையினர் மேற்கொள்ள வேண்டும். சுதந்திரப் போராட்ட தியாகிகளை அவரவர் வீட்டுக்கு சென்று, கவுரவிக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

கொரோனா தடுப்பு பணியில் சிறப்பாகப் பணியாற்றிய அலுவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ் தயாரிக்கும் பணிகளை விரைவில் மேற்கொள்ள வேண்டும். அலுவலர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணிகளை சிறப்பாக மேற்கொள்ள வேண்டும் என்று ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

Related Stories: