நெல்லை: மூணாறு நிலச்சரிவில் தமிழர்கள் உயிரிழந்ததற்கு மத்திய, மாநில அரசுகளே காரணம் என்று கூறி போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மக்கள் அதிகாரம் உள்ளிட்ட அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் மூணாறு நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.50 லட்சம் வழங்கவும் வலியுறுத்தி உள்ளனர்.