ஸ்ரீநகர்: இயற்கையின் வரப்பிரசாதம் காஷ்மீர். பசுமையான இயற்கையும், பனிமலைகளும் கொண்டது. இதனால், இது உலகளின் நாடுகளின் விருப்பமான சுற்றுலா தலமாக விளங்கி வருகிறது. தீவிரவாதம் ஒருபுறம் இருந்தாலும், இதன் அழகை உயிரை பணயம் வைத்து ரசிக்க வரும் உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் ஏராளம். தற்போது, கொரோனா ஊரடங்கு காரணமாக இங்கு சுற்றுலா முடங்கி போயுள்ளது. காஷ்மீர் மாநிலத்துக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து, கடந்தாண்டு ஆகஸ்ட்டில் ரத்து செய்யப்பட்டு 2 யூனியன் பிரதேசமாக பிரிக்கப்பட்ட பிறகு, இப்பகுதியில் பல்வேறு மேம்பாட்டு பணிகளை மத்திய, மாநில அரசுகள் செய்து வருகின்றன. ஜம்மு காஷ்மீரில் உலகிலேயே மிக உயரமான செனாப் ரயில்பாதை அமைக்கப்பட்டு வருகிறது. இது, இப்பகுதியின் சுற்றுலாவை புதிய உயரத்துக்கு அழைத்துச் செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
காஷ்மீர் பியூட்டிபுல் காஷ்மீர் காஷ்மீர் ஒன்டர்புல் காஷ்மீர்: சுற்றுலாவுக்காக பாக். எல்லையில் 600 கிமீ சாலை
- காஷ்மீர் அழகான காஷ்மீர் காஷ்மீர் அற்புதமான காஷ்மீர்
- பாக்
- எல்லை
- சுற்றுலா.
- காஷ்மீர் அழகான காஷ்மீர் காஷ்மீர்
- சாலை
- அற்புதமான காஷ்மீர்