பொன்னேரி: பழவேற்காட்டில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மீனவர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த பழவேற்காட்டில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மீனவர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 18 வயது நிரம்பிய அனைத்து மீனவர்களையும் நலவாரியத்தில் உறுப்பினர்களாக இணைத்து கொள்ள வேண்டும். மீன்வளத்துறை மற்றும் நலவாரிய சலுகைகளை உடனுக்குடன் வழங்க வேண்டும். நிலுவையில் உள்ள மீன்பிடி தடைக்கால நிவாரணத் தொகையை உடனே வழங்க வேண்டும்.