பந்தலூர்:பந்தலூர் அருகே அத்திக்குன்னு பகுதியில் தேயிலைத் தோட்டத்தில் காட்டு யானைகள் முகாமிட்டதால் தொழிலாளர்கள் பீதி அடைந்தனர். பந்தலூர் சுற்றுவட்டார பகுதிகளான சேரம்பாடி கோரஞ்சால், காப்பிகாடு, அய்யன்கொல்லி, மழவன் சேரம்பாடி, சேலக்குன்னு, அத்திக்குன்னு, பிதர்காடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் காட்டு யானைகள் நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அச்சமடைந்தனர். குடியிருப்புகள் மற்றும் தேயிலைத் தோட்டங்களில் முகாமிடும் யானைகள் குடியிருப்புகளை சேதப்படுத்துவது, விவசாய பயிர்களை சேதம் செய்வது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.