ஆண்டிபட்டி: தேனி அருகே உள்ள கொடுவிலார்பட்டி ஊராட்சியில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசிக்கின்றனர். கிராமத்தில் விவசாயம், கால்நடை வளர்ப்புத் தொழில் பிரதானமாக உள்ளது. கிராமத்தின் வழியாக செல்லும் கழிவுநீர் ஓடையில், கோழிக்கடை இறைச்சிக் கழிவுகள், பிளாஸ்டிக் பொருட்கள், குப்பைகளை கொட்டுகின்றனர். இதனால், கழிவுநீர் தேங்குகிறது. இதை தூர்வாராததால் சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளது. கழிவுநீர் ஓடையில் செடிகள் வளர்ந்து புதர்போல காட்சியளிக்கின்றது.