கீழ்பென்னாத்தூர்: கீழ்பென்னாத்தூர் அருகே கல்குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கீழ்பென்னாத்தூர் அடுத்த ஐங்குணம் கிராமத்தில் கல்குவாரி செயல்பட்டு வந்தது. இந்த குவாரியால் காற்று மாசுபாடு ஏற்பட்டு வந்ததால், அப்பகுதி மக்கள் மற்றும் விவசாயிகள் கடுமையாக எதிர்த்து வந்தனர். இந்நிலையில், கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு கல்குவாரிக்கான ஏலம் விடப்பட்டு, மீண்டும் பணி தொடங்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இதையறிந்த, கிராம மக்கள் நேற்று கல்குவாரி அருகே திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.