இஸ்லாமாபாத்: அளவுக்கு அதிகமான வகையில் இந்தியா ஆயுதங்களை வாங்குகிறது என பாகிஸ்தான் வெளியுறவுத்துறை கருத்து தெரிவித்துள்ளது. பிரான்ஸ் நாட்டிடம் இருந்து இந்தியா ரபேல் போர் விமானங்களை ஆர்டர் செய்துள்ளது.மொத்தமாக 36 விமானங்களை இந்தியா ஆர்டர் செய்த நிலையில் நேற்று 5 விமானங்கள் இந்தியா கொண்டு வரப்பட்டது. பிரான்ஸ் நாட்டின் அதி நவீன 4.5ம் தலைமுறையைச் சேர்ந்த ரபேல் போர் விமானங்கள் ஆகும் இது. ஹரியானாவில் உள்ள அம்பாலா விமான தளத்திற்கு இந்த விமானங்கள் நேற்று வந்தது. இந்த விமானங்கள் இந்தியா வந்ததை மக்கள் திருவிழா போல கொண்டாடினார்கள். அதற்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்நிலையில் இது தொடர்பாக பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஆயிஷா ஃபாரூகி கூறுகையில், சில முன்னாள் மூத்த இந்திய அதிகாரிகள் மற்றும் பல சர்வதேச தகவலின்படி, இந்த ரஃபேல் ஜெட் விமானங்கள் இரட்டை திறன் கொண்ட அமைப்புகள் ஆகும்.