பெண் பத்திரிகையாளர்கள் குறித்து அவதூறு கருத்து கிஷோர் கே.சுவாமி கைது: மத்திய குற்றப்பிரிவு போலீஸ் நடவடிக்கை

சென்னை:  சமூக வலைதளங்கள் மூலம் தன்னை தொடர்ந்து தொந்தரவு செய்து வருவதாக கிஷோர் கே.சுவாமி என்பவர் மீது பெண் பத்திரிகையாளர ஒருவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். இது தொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி கிஷோர் கே.சுவாமி மீது ஐபிசி 354(டி) (சமூக வலைதளங்கள் மூலம் பெண்ணை பின் தொடர்ந்து தொந்தரவு செய்வது) மற்றும் தமிழ்நாடு பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். போலீசார் கிஷோர் கே.சுவாமியை அவரது வீட்டிற்கு சென்று  பார்த்தனர். அவர் வீட்டில் இல்லை. பின்னர் அவரது செல்போன் சிக்னலை வைத்து தனியார் யூ-டியூப் சேனலில் இருந்த கிஷோர் கே.சுவாமியை நேற்று மாலை கைது செய்தனர். பிறகு அவரை எழும்பூரில் உள்ள பழைய மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் வைத்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: