செங்கல்பட்டு: வண்டலூர் அடுத்த ஓட்டேரியை சேர்ந்தவர் வினோத் (45). அதே பகுதியில் மருந்து கடை நடத்தி வருகிறார். அதே பகுதியை சேர்ந்தவர் சிலம்பரசன். பிரபல ரவுடி. இந்நிலையில், நேற்று காலை வினோத் மருந்து கடையில் வியாபாரம் செய்து கொண்டிருந்தார். அப்போது, அவரது செல்போனுக்கு அழைப்பு வந்தது. அதில், ரவுடி சிலம்பரசன் பேசுகிறேன். எனக்கு ரூ.50 ஆயிரம் மாமூல் தரவேண்டும் என கூறி மிரட்டியுள்ளார். இதுகுறித்து, ஓட்டேரி போலீசில், வினோத் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து, சிலம்பரசனை வலைவீசி தேடிவருகின்றனர்.இதற்கிடையில், மருந்து கடை உரிமையாளரிடம், ரவுடி சிலம்பரசன் பணம் கேட்டு மிரட்டிய ஆடியோவுடன், தமிழ்நாடு வியாபாரிகள் சங்க தலைவர் முத்துகுமார், எஸ்பி கண்ணனிடம் புகார் அளித்தார். மேலும், அவர் மிரட்டிய ஆடியோ பதிவையும் கொடுத்தார்.