கொரோனாவுக்கு என்.ஆர்.காங். பொதுச்செயலாளர் பலி

புதுச்சேரி: புதுச்சேரியில் என்.ஆர். காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பாலனுக்கு கடந்த 23ம் தேதி கொரோனா உறுதி செய்யப்பட்டது. புதுச்சேரியில் உள்ள ஒரு தனியார் மருத்துவக்கல்லூரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். மேலும் தனது உடல்நிலை மிகவும் மோசமடைந்து விட்டதாகவும், தனக்கு உடனடியாக உயர் மருத்துவ சிகிச்சை தேவை எனவும் நேற்று கூறியிருந்தார். ஆனால், நேற்று அதிகாலை 3.25 மணியளவில் பாலன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இறந்த பாலனுக்கு வயது 68. என்.ஆர். காங்கிரஸ் ஆட்சியில் நியமன எம்.எல்.ஏ.வாக பதவி வகித்தார். பாலன் மறைவுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, முன்னாள் முதல்வர் ரங்கசாமி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Related Stories: