ஊரடங்கில் தொற்று பரவும் வகையில் மாட்டிறைச்சி விற்ற தம்பதி கைது

திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே ஊரடங்கு நேரத்தில் கொரோனா தொற்று பரவும் வகையில், மாட்டிறைச்சி விற்ற கணவன், மனைவியை போலீசார் கைது செய்தனர். திருவள்ளூர் அடுத்த புல்லரம்பாக்கம் போலீஸ் நிலைய எஸ்ஐ சிவா

மற்றும் போலீசார் நேற்று முன்தினம் ஊரடங்கு உத்தரவையொட்டி ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். புல்லரம்பாக்கம் அம்பேத்கர் நகர் பகுதியில் ரோந்து சென்றபோது, ஊரடங்கு உத்தரவை மீறி மாட்டிறைச்சி கடை திறந்து இருந்தது.

இதையடுத்து போலீசார் இறைச்சி கடையை மூடினர். மேலும் தொற்று ஏற்படும் வகையில், இறைச்சி கடையை திறந்து வைத்து, வியாபாரம் செய்து கொண்டு இருந்த அதே பகுதியை சேர்ந்த ரகு(55), அவரது மனைவி சரளா(48) ஆகிய

இருவரையும் கைது செய்தனர்.

Related Stories: