ஊத்துக்கோட்டையில் சப்த கன்னியர்களுக்கு வளையல் அலங்காரம்

ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டையில் கிராம தேவதைகளான வைஷ்ணவி, வாராகி, கௌமாரி, மகேஸ்வரி, இந்திராணி, பிராம்மி, சாமுண்டி ஆகிய சப்த கன்னியர் எனப்படும் 7 அம்மன்களுக்கு நேற்று முன்தினம் ஆடிப்பூரத்தை முன்னிட்டு பால், தயிர், பன்னீர், சந்தனம், இளநீர் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்கள் மூலம் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.

பின்னர் சப்த கன்னியருக்கு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு ஒரு லட்சம் வளையல் அணிவித்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் மகா தீபாராதனை காட்டப்பட்டது.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோயில் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.

Related Stories: