சென்னை: முன்னணி வீரர்கள் பங்கேற்கும் ‘லெஜண்ட்ஸ் ஆப் செஸ்’ ஆன் லைன் போட்டியில் விஸ்வாதன் ஆனந்த் 3வது சுற்றிலும் தோல்வியை சந்தித்துள்ளார். ஒன்றரை லட்சம் அமெரிக்க டாலர் பரிசுத் தொகை கொண்ட இப்போட்டியில்,
ஆனந்த் உட்பட உலகின் முன்னணி வீரர்கள் 10 பேர் இப்போட்டியில் பங்கேற்றுள்ளனர். 9 சுற்றுகளை கொண்ட லீக் போட்டி ஜூலை 29 வரையிலும், அரையிறுதி ஜூலை 31 - ஆக. 2 மற்றும் பைனல் ஆக.3 - ஆக.5 வரை நடக்க உள்ளது. முன்னாள் உலக சாம்பியனான ஆனந்த், முதல் 2 சுற்றுகளில் முறையே பீட்டர் ஸ்விட்லர் (ரஷ்யா), நடப்பு உலக சாம்பியன் மேக்னஸ் கார்ல்சன் (நார்வே)ஆகியோரிடம் தோற்றார்.