பெங்களுரு: பெங்களூருவை சேர்ந்தவர் பிரபல பளுதூக்கும் வீரர் முஹமது அஸ்மத்துல்லா. சர்வதேச போட்டிகளில் 295 கிலோவை தூக்கி புகழ்பெற்ற இவர், கொரோனாவால் உயிரிழந்தவர்களை அடக்கம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளார். இதற்காக, தன்னை மெர்சி இயக்கத்துடன் இணைத்துக் கொண்டு, இந்த சேவையில் ஈடுபட்டு வருகிறார். இது குறித்து அவர் கூறுகையில், ‘‘கொரோனாவால் இறந்தவரின் உடலை சுமக்கும் போது நான் அனுபவிக்கும் வலி மற்றும் மனவேதனையை விளக்க முடியாது. அவரின் குடும்பத்தினர்படும் துன்பத்தை நான் பார்க்கிறேன்.