சென்னை: தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை முதன்மை செயலாளர் சந்திர மோகன் வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழ்நாடு வக்பு வாரிய உறுப்பினர்களுக்கான தேர்தல் ஆகஸ்ட் 19ம் தேதி நடைபெறவுள்ளது. தபால் மூலம் தங்கள் வாக்கை பதிவு செய்ய விரும்புகின்ற வாக்காளர்கள் (முத்தவல்லிகள்) வக்பு கண்காணிப்பாளர் அலுவலகங்களிலிருக்கும் இணைப்பு-IIல் குறிப்பிட்டுள்ள படிவத்தை பூர்த்தி செய்து, மண்டல வக்பு கண்காணிப்பாளர்களிடம் ஆகஸ்ட் 8ம் தேதி மாலை 5 மணி வரை தபால் மூலம் வாக்களிப்பதற்கான விண்ணப்பங்களை நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோஅனுப்ப வேண்டும். தபால் மூலம் வாக்களிப்பதற்கான வாக்குச் சீட்டு வாக்காளர்களுக்கு பதிவுத் தபாலில் அனுப்பி வைக்கப்படும்.