புதுடெல்லி: காக்ராபர் அணுமின் நிலையத்தில் உள்நாட்டு தொழில்நுட்பத்தில் அமைக்கப்பட்ட 3வது அணுஉலையில் மின் உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது. குஜராத் மாநிலத்தில் உள்ள காக்ராபர் அணுமின் நிலையத்தின் 3வது அணு உலை, 700 மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த அணு உலையில் நேற்று முதல் மின் உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
பிரதமர் மோடி தனது டிவிட்டர் பதிவில், ‘காக்ராபர் அணு மின் நிலையத்தின் மூன்றாவது அணு உலையில் மின் உற்பத்தி தொடங்கப்பட்டதற்கு விஞ்ஞானிகளுக்கு வாழ்த்து தெரிவிக்கிறேன்.