புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அருகே எருக்குமணிப்பட்டியை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன். இவரது மனைவி ஐஸ்வர்யா(23). நிறை மாத கர்ப்பிணியான இவருக்கு நேற்று அதிகாலை பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ஐஸ்வர்யா ராப்பூசல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த டாக்டர்கள் உடனடியாக புதுக்கோட்டை அரசு மருத்துக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்ல பரிந்துரை செய்தனர். பின்னர் இலுப்பூரில் இருந்து 108 ஆம்புலன்ஸில் ஐஸ்வர்யாவை அனுப்பி வைத்தனர்.