ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட் ஆட்சியை கவிழ்க்க பேரம் பேசிய விவகாரத்தில் மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ராஜஸ்தானில் முதலமைச்சர் அசோக் கெலாட் அரசுக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய சச்சின் பைலட் உள்பட 19 எம்.எல்.ஏக்களை தகுதிநீக்கக் கோரி காங்கிரஸ் கட்சி சார்பில் சபாநாயகரிடம் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இந்நிலையில், அசோக் கெலாட் தலைமையிலான ஆட்சியை கவிழ்க்க காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏ பன்வர் லால் சர்மாவிடம் மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத், பாஜக தலைவர் சஞ்சய் ஜெயின் ஆகியோர் பேரம் பேசியதாக ஆடியோ நேற்று வெளியானது.