பட்டிவீரன்பட்டி: பட்டிவீரன்பட்டி அருகே இரையை விழுங்கி நகர முடியாமல் கிடந்த 12 அடி மலைப்பாம்பு பிடிபட்டது. திண்டுக்கல் மாவட்டம், பட்டிவீரன்பட்டி அருகேயுள்ள அய்யம்பாளையம் சாத்தான்கரடு பகுதியில் அய்யம்பாளையத்தைச் சேர்ந்த செந்தில்குமாருக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. இந்த தோட்டத்தில் நேற்று வேலையாட்கள் வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது சுமார் 12 அடி நீளமுள்ள மலைப்பாம்பு தோட்டத்தில் படுத்திருப்பதைக் கண்டு அவர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். உடனடியாக வத்தலக்குண்டு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது.