காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக செயற்குழு உறுப்பினர்கள் கூட்டம்: காணொலி காட்சி வாயிலாக இன்று நடைபெறுகிறது

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தா.மோ.அன்பரசன் எம்எல்ஏ வெளியிட்டுள்ள அறிவிப்பு:

காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக அவசர செயற்குழு உறுப்பினர்கள் கூட்டம் இன்று மாலை 4 மணிக்கு நடைபெற உள்ளது. காணொலி காட்சி வாயிலாக நடைபெறும் இந்தக் கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் துரைசாமி தலைமை தாங்குகிறார். மாவட்ட துணைச் செயலாளர்கள் வெ.விசுவநாதன், ஜி.சி.அன்புச்செழியன், கலைவாணி காமராஜ் மற்றும் மாவட்ட பொருளாளர் எஸ்.சேகர் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். இக்கூட்டத்தில் மின் கட்டணத்தை குறைக்க வலியுறுத்தி வரும் 21.7.2020 அன்று அனைத்து வீடுகளின் முன்பு கருப்புக் கொடி ஏற்றி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது குறித்து ஆலோசனை நடத்தப்பட உள்ளது. எனவே, திமுக நாடாளுமன்ற - சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமைச் செயற்குழு - பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய - நகர - பேரூர் செயலாளர்கள், அணிகளின் மாவட்ட அமைப்பாளர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் உள்ளிட்ட அனைவரும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் என்று அந்த அறிக்கையில் கேட்டுக்கொண்டுள்ளார்.

Related Stories: