வாஷிங்டன்: பிட்காயின் எனப்படும் கண்ணுக்கு தெரியாத கரன்சியின் பெயரில் உலகில் மிகவும் பிரபலமான மற்றும் பெரும் கோடீஸ்வரர்களின் ட்விட்டர் கணக்குகள் ஹேக் செய்யப்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பராக் ஒபாமா, முன்னாள் துணை அதிபர் ஜோ பிடேன், நியூயார்க் முன்னாள் மேயர் மைக்கேல் ப்ளூம்பெர்க், மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனர் பில்கேட்ஸ், அமேசான் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான் ஜெஃப் உள்ளிட்ட பிரபலங்களின் ட்விட்டர் கணக்குகளில் இணைய ஊடுருவிகள் ஊடுருவினர். இது உலக அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.