ராமர் பற்றிய நேபாள பிரதமரின் கருத்துக்கு அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சகம் விளக்கம்

காத்மாண்டு: ராமர் பற்றிய நேபாள பிரதமரின் கருத்துக்கு அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. பிரதமர் சர்மா ஒலியின் கருத்து யார் மனதையும் புண்படுத்துவதாக அல்ல. அயோத்தியின் மாண்பை குறைக்கும் நோக்கில் சர்மா ஒலி அந்த கருத்தை தெரிவிக்கவில்லை. பிரதமர் சர்மா ஒலி தெரிவித்த கருத்தில் எந்த அரசியல் உள்நோக்கமும் இல்லை. ராமர் பிறப்பிடம் பற்றி பல அனுமானங்கள் இருப்பதால் ஆய்வு நோக்கில் சர்மா ஒலி அவ்வாறு பேசினார் என நேபாள வெளியுறவுத்துறைவிளக்கம் அளித்துள்ளது.

Related Stories: