சீர்காழி: சீர்காழிஅருகே உப்பனாற்றில் மீன்பிடிக்கும் போது வலையில் ராட்சத கல்நண்டு சிக்கியது. கொரோனா ஊரடங்கு ஏற்றுமதி தடையால் ரூ.700க்கு விற்பனையானது. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே சட்டநாதபுரம் உப்பனாற்றில் திருக்கோலக்கா தெருவை சேர்ந்த ஆனந்தராஜ் (55) என்பவர் நேற்று வலைவிரித்து மீன் பிடித்து கொண்டிருந்தார். அப்போது வலையில் சிக்கிய ராட்சத கல்நண்டை பிடித்து கரைக்கு கொண்டு வந்தார்.ஒன்றரை கிலோ எடை கொண்டதாக இருந்தது. இதனால் மகிழ்ச்சி அடைந்த ஆனந்தராஜ், மருத்துவ குணம் கொண்ட ராட்சத கல்நண்டை விற்பனைக்காக எடுத்து சென்றார்.