சென்னை: ஆவடி மாநகராட்சியில் பணியாற்றி வந்த வருவாய் ஆய்வாளர் கொரோனா தொற்றுக்கு பலியாகியுள்ளார். இதனையடுத்து, அலுவலகம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு இழுத்து மூடப்பட்டது. ஆவடி மாநகராட்சியில் பணிபுரியும் 47 வயது நிரம்பிய வருவாய் ஆய்வாளர், கடந்த 3 மாதமாக தொற்று தடுப்பு நடவடிக்கை பணியில் தீவிரமாக ஈடுபட்டு வந்தார். இதனையடுத்து, கடந்த சில தினங்களுக்கு முன்பு அவருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டது சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது. இதன் பிறகு, அவர் வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.