வேலூர்: விஐடி பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் படிப்பதற்கு ஆண்டுதோறும் விஐடி நுழைவுத் தேர்வு நடத்துகிறது. கொரானா வைரசால் நாடெங்கும் அசாதாரண சூழ்நிலை நிலவுவதால் விஐடி பல்கலைக்கழகம் இந்த ஆண்டுக்கான நுழைவுத் தேர்வை ரத்து செய்துள்ளது. மேலும் மாணவ, மாணவிகள் தங்களின் பிளஸ் 2வில் இயற்பியல், வேதியியல், கணிதம் அல்லது உயிரியல் மதிப்பெண் அடிப்படையில் விஐடி பல்கலைக்கழகத்தில் தங்களுக்கு விருப்பமான பொறியியல் பாடப்பிரிவில் சேர்ந்து படிக்கலாம். அதேபோல் ஜேஇஇ தேர்வு மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு விஐடி பல்கலைக்கழகத்தில் சேர்வதற்கு முன்னுரிமை கொடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.