டெல்லி : மத்திய அரசின் தவறான பொருளாதார மேலாண்மையால் இந்தியா பெரும் பாதிப்பினை எதிர்கொண்டுள்ளதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார். கொரோனா ஊரடங்கின் போது, இந்திய குடும்பங்களின் வருமானம் பற்றிய தரவுகள் அடங்கிய ஸ்க்ரீன் ஷாட் ஒன்றை ராகுல் காந்தி தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார். அதில் கொரோனா ஊரடங்கு எதிரொலியாக 10ல் 8 இந்திய குடும்பங்கள் வருமானத்தை இழந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.