ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி அருகே கொரோனா தடுப்பு பணிகளில் அதிகாரிகள் அலட்சியம் காட்டுவதாக மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். தேனி மாவட்டம், ஆண்டிபட்டி ஒன்றியம் ராஜகோபாலன்பட்டி ஊராட்சியில் சீதாராம்தாஸ் நகர், ஜெ.ஜெ.நகர், சத்யா நகர் பகுதிகள் உள்ளன. இப்பகுதிகளில் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். சீதாராம்தாஸ் நகரில் இதுவரை 3 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 52 வயது பெண் ஒருவர் கொரோனாவால் உயிரிழந்தார். இந்நிலையில் மேற்கண்ட பகுதிகளில் ஊராட்சி நிர்வாகம் சார்பில் சுகாதாரப்பணிகள் மேற்கொள்ளப்படவில்லை என புகார் எழுந்துள்ளது.