புதுடெல்லி: கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சைஅளிக்க நாட்டின் முதல் பிளாஸ்மா வங்கியை டெல்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று திறந்து வைத்தார். கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு உயிருக்கு போராடும் நிலையிலுள்ள நோயாளிகளை மீட்க பிளாஸ்மா தெரபி முறையை மருத்துவர்கள் பரிந்துரைத்தனர். இதனை ஐசிஎம்ஆர் ஒப்புதலுடன் கேரளாவை தொடர்ந்து டெல்லி அரசும் மேற்கொண்டது. இந்த சிகிச்சை டெல்லியில் 29 பேருக்கு மேற்கொள்ளப்பட்டு அனைவரும் குணமடைந்து வீடு திரும்பினர்.