சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவன தலைவராக ஸ்ரீ காந்த் மாதவ் வைத்யா பொறுப்பேற்பு

சென்னை: இந்தியன் ஆயில் நிறுவனத்தின் தலைவராகவும், சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேசன் லிமிடெட் நிறுவன தலைவராக ஸ்ரீகாந்த் மாதவ் வைத்யா நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். ரூர்கேலாவில் உள்ள தேசிய தொழில்நுட்ப கல்லூரியில் படித்து முடித்த வேதியியல் பொறியாளரான இவர் கடந்த 2019 ஆண்டு அக்டோபர் மாதம் முதல் இந்தியன் ஆயில் இயக்குனர் குழுவில் ரீபைனரீஸ் இயக்குனராக இருந்தவர். பெட்ரோலியம் ரீபைனரீஸ், பெட்ரோ கெமிக்கல்ஸ் துறைகளில் 34 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் மிக்கவர். இந்நிலையில் நேற்று நிறுவனத்தின் சேவைப் பணிகளிலிருந்து சஞ்சீவ் சிங் பணி மூப்பு பெற்றுள்ளதால் இந்தியன் ஆயில் நிறுவனத்தின் தலைவராகவும், சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேசன் லிமிடெட் நிறுவன தலைவராகவும் ஸ்ரீகாந்த் மாதவ் வைத்யா நேற்று பொறுப்பேற்பு கொண்டார்.

Related Stories: