சத்தியமங்கலம்: தாளவாடி அருகே 20 ஆடு, 18 நாய், 3 மாடுகளை வேட்டையாடிய சிறுத்தை கூண்டில் சிக்கியது ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் தாளவாடி வனச்சரத்தில் தொட்டகாஜனூர், பீம்ராஜ்நகர், சூசைபுரம் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் கால்நடை வளர்ப்பு முக்கிய தொழிலாக உள்ளது. வனத்தையொட்டி உள்ள இக்கிராமங்களில் இரவு நேரங்களில் சிறுத்தை ஒன்று தோட்டங்களில் புகுந்து ஆடு, மாடு மற்றும் நாய்களை கடித்து கொன்றது. கால்நடைகளை எளிதில் வேட்டையாடிய பழகிய சிறுத்தை, விவசாயப் பகுதியில் பயன்பாடு இல்லாமல் உள்ள குவாரியில் பதுங்கியது. இந்த சிறுத்தை கடந்த 6 மாதத்தில் 20 ஆடுகள், 18 காவல் நாய்கள் மற்றும் 3 மாடுகளை என தாக்கி கொன்றுள்ளது. சிறுத்தையை கூண்டுவைத்து பிடிக்க வனத்துறை கூண்டு வைத்தனர்.