பல்லாரி: கொரோனா பாதித்து உயிரிழந்தவர்களின் சடலங்களை ஒரே பள்ளத்தில் தள்ளி அடக்கம் செய்த சம்பவம் பல்லாரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் உயிரிழப்புகளும் அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம் கர்நாடகத்தில் சிகிச்சை பலனின்றி 19 பேர் உயிரிழந்தனர். இதில், 12 பேர் பல்லாரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள். இதையடுத்து அந்த சடலங்களை ஒரே பள்ளத்தில் புதைக்க சுகாதாரத்துறையினர் பாதுகாப்பு கவசங்களுடன் வருகின்றனர். பின்னர், மனிதாபிமானமே இல்லாமல் ஒவ்வொரு சடலத்தையும் இழுத்து வந்து பள்ளத்தில் தள்ளுகின்றனர்.