பீஜிங்: இந்தியர்கள் சிறப்பு விமானத்தில் சீனா வருவதற்கு, அந்நாடு தற்காலிகமாக தடை விதித்துள்ளது. இந்த நடவடிக்கை கொரோனா பரவலை தடுக்கும் நோக்கில் எடுக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து, மத்திய அரசு அதிகாரி ஒருவர் கூறியதாவது:மத்திய அரசு, வந்தே பாரத் திட்டத்தின் கீழ் வெளிநாடுகளில் உள்ள இந்தியர்களை ஏர் இந்தியா விமானம் மூலம் அழைத்து வர ஏற்பாடு செய்துள்ளது. அதுபோல, இந்தியாவில் இருந்தும், ஏராளமானோர் வெளிநாடுகளுக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர். இந்நிலையில், ஜூன், 21ல் இந்திய துாதர்களின் குடும்பத்தினர், பன்னாட்டு வங்கி உயரதிகாரிகள் உள்ளிட்ட, 100 பேர், இந்தியாவில் இருந்து, சிறப்பு விமானம் மூலம், சீனாவின் ஷாங்காய் நகர் சென்றனர்.