டெல்லி : இந்திய அரசின் சட்டவிதிகளுக்கு உட்பட்டு செயல்பட தயாராக இருப்பதாக டிக் டாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது குறித்து டிக் டாக் நிறுவனத்தின் இந்திய தலைமை அதிகாரி நிகில் காந்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், விளக்கங்களை சமர்ப்பிப்பதற்கும், பதிலளிப்பதற்கும் ஒரு சந்தர்ப்பமாக அரசு பிரதிநிதிகளை சந்திப்பதற்கு நாங்கள் அழைக்கப்பட்டுள்ளோம் என்று அவர் தெரிவித்துள்ளார். இந்திய பயனர்களின் எந்த தகவல்களையும் சீனா அரசு உள்பட எந்த வெளிநாட்டு அரசுடனும் பகிர்ந்து கொள்ளவில்லை என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. பயனர்களின் விவரங்களை உயர் பாதுகாப்புடன் வைத்திருப்பதற்கு அதிக முக்கியத்துவம் அளித்திருப்பதாகவும் நிகில் காந்தி குறிப்பிட்டு இருக்கிறார்.