புதுடெல்லி: அரசு துறைகளின் மூலம் தனக்கு அச்சுறுத்தல் விடுக்கும் உபி மாநில அரசுக்கு சவால் விடுக்கும் வகையில், `நான் இந்திரா காந்தியின் பேத்தி; உங்களது அச்சுறுத்தல்களுக்கு அஞ்ச மாட்டேன்’ என்று காங்கிரஸ் பொது செயலாளர் பிரியங்கா காந்தி பதிலடி கொடுத்துள்ளார். உத்தர பிரதேச மாநில அரசு கொரோனா தொற்று விவகாரத்தில் சரியான நடவடிக்கை எடுக்காததால்தான், ஆக்ராவில் அதிகளவு கொரோனா மரணங்கள் நடந்திருப்பதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார். இதனைத் தொடர்ந்து, அவர் தனது கருத்தை திரும்ப பெற வேண்டும் என்று உபி மாநில அரசு, ஆக்ரா நிர்வாகத்தின் மூலம் அவரை வலியுறுத்தியது.