புதுடெல்லி: சர்வதேச விமானங்கள் சேவை வருகிற ஜூலை 15ம் தேதி வரை இயங்காது என விமான போக்குவரத்து துறை இயக்குனரகம் அறிவித்துள்ளது. கொரோனா நோய் பரவுதல் தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் இறுதியில் தேசிய அளவில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக மார்ச் 23ம் தேதி முதல் வெளிநாட்டு விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டது. கடந்த மாதம் 25ம் தேதி உள்நாட்டு விமான சேவைகள் தொடங்கப்பட்டது.