இந்தியாவின் எல்லைகளில் சாலைகள் மற்றும் உள்கட்டமைப்பு திட்டங்களை உருவாக்குவதில் ஈடுபடும் ஊழியர்களுக்கு சுமார் 170 சதவீதம் வரை சம்பள உயர்வு வழங்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது. சீனா, பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளின் எல்லையை ஒட்டிய இந்திய பகுதிகளில் நெடுஞ்சாலை திட்டங்களில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு ஜூன் 1 முதல் இடற்பாட்டுபடியை 100 விழுக்காட்டிலிருந்து 170 விழுக்காடு வரை உயர்த்தி தேசிய நெடுஞ்சாலை உட்கட்டமைப்பு மேம்பாட்டு கழகம் ஆணை வெளியிட்டுள்ளது. அதன்படி, தொழிற்நுட்ப பணியாளர் அல்லாத டேட்டா என்ட்ரி ஆப்பிரேட்டர்களுக்கு ஊதியம் 16 ஆயிரத்து 770 ரூபாயிலிருந்து 41 ஆயிரத்து 440ஆக உயர்த்தப்பட்டுள்ளது.