சீர்காழி: கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்ட குழாய் உடைப்பால், ஆயிரக்கணக்கான லிட்டர் தண்ணீர் வீணாகிறது. இதனால் கடலோர கிராமமக்கள் அவதிப்படுகின்றனர். நாகை மாவட்டம் சீர்காழியை சுற்றியுள்ள கடலோர கிராமங்களுக்கு கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் தண்ணீர் வழங்கபட்டு வருகிறது தற்போது நிலவும் கடும் வறட்சியால் போதிய தண்ணீர் இல்லாமல் கடலோர கிராமமக்கள் தவித்து வருகின்றனர்.
இந்நிலையில் சீர்காழி அருகே நாராயணபுரம் கிராமத்தில் கொள்ளிடம் கூட்டு குடிநீர் குழாயில் அடுத்தடுத்து இரண்டு இடங்களில் உடைப்பு ஏற்பட்டு கடந்த சில நாட்களாக தினமும் ஆயிரக்கணக்கான லிட்டர் குடிநீர் வீணாக அருகில் உள்ள வாய்க்காலில் செல்கிறது.