தண்ணீரில் மூழ்கி சிறுவன் பலி

தாம்பரம்: தாம்பரம் அருகே தண்ணீர் தொட்டியில் மூழ்கிய சிறுவன் பரிதாபமாக பலியானான். தாம்பரம் அடுத்த நெமிலிச்சேரி, மேட்டுத்தெருவை சேர்ந்தவர் செல்வராஜ் (44). இவர், கூலி தொழிலாளி. இவரது மகன் சந்தோஷ் குமார் (6). இவன், நேற்று முன்தினம் மாலை இவரது வீட்டின் அருகே உள்ள உறவினரின் புதிய கட்டிடத்தின் அருகே விளையாடிக்கொண்டு இருந்தான்.

அப்போது, அந்த புதிய கட்டிடத்தில் இருந்த தண்ணீர் தொட்டியில் தவறுதலாக சந்தோஷ்குமார் விழுந்தான். இதில், மயக்கமடைந்த சிறுவனை அக்கம் பக்கத்தினர் மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அப்போது, செல்லும் வழியிலேயே சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். சம்பவம் குறித்து சிட்லபாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: