சிவகங்கை: கொரோன நிவாரண பணிகளை காரணம் காட்டி ஊழல் நடந்துள்ளதாக சிவகங்கை ஒன்றிய குழுக்கூட்டத்தில் உறுப்பினர்கள் புகார் எழுப்பி உள்ளனர். சிவகங்கை ஒன்றியக் குழுக்கூட்டத்தில் பல்வேறு திட்ட செலவுக்கு உறுப்பினர்களின் அனுமதி கோரப்பட்டது. இது குறித்த விவாதத்தின் போது கொரோன விழிப்புணர்வு ஏற்படுத்த ரூ.18 லட்சம் செலவு செய்ததில் முறைகேடு நடந்துள்ளதாக உறுப்பினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.