திருப்பூர்: திருப்பூரைச் சேர்ந்தவர் சுப்புலட்சுமி(34). இவர் ரவுடி பேபி சூர்யா என்ற பெயரில் டிக்-டாக்கில் பிரபலமானவர். சிங்கப்பூர் சென்றிருந்த அவர், கடந்த 16ம் தேதி விமானம் மூலம் கோவை வந்தார். பின்னர் திருப்பூரில் உள்ள அவரது வீட்டிற்கு சென்றார். அப்போது, உள்ளூர் மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், அவரை அதிகாரிகள் அழைத்துச் சென்று கொரோனா பரிசோதனை செய்தனர். இந்நிலையில், டிக்-டாக்கில் மூலம் தன்னை அவதூறாகப் பேசி கொலை மிரட்டல் விடுத்ததாக பூண்டியை சேர்ந்த செந்தில்குமார் என்பவர், சூர்யா மீது வீரபாண்டி போலீசில் புகார் செய்தார்.