புதுடெல்லி: இந்திய - சீனா ராணுவத்துக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் நடந்த மோதலில், இருதரப்பிலும் வீரர்கள் கொல்லப்பட்டனர். இதனால், எல்லையில் இரு நாடுகளுக்கும் இடையே பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது. மேலும், சீனாவை கண்டித்து நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த சூழ்நிலையை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு, தலைநகர் டெல்லியில் தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் சதி திட்டம் தீட்டியுள்ளனர். இது பற்றி உளவுத்துறைகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதை அரசுக்கு தெரிவித்து, உஷாராக இருக்கும்படி எச்சரிக்கை விடுத்துள்ளன.