திருச்சி: திருச்சி உள் அரியமங்கலம் மந்தை பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான இலவச கட்டிடத்தில் 70 வருடமாக படிப்பகம் ஒன்று இயங்கி வருகிறது. இப் படிப்பகத்தில் 40 ஆயிரம் வகையான புத்தகங்கள் உள்ளன. இப்பகுதியில் உள்ள இரண்டு பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு இப்படிப்பகம் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. அதுமட்டுமில்லாமல் இப்பகுதி கல்லூரி மாணவ-மாணவிகளும் இந்த படிப்பகத்தில் புத்தகங்களை எடுத்துப் படித்து வருகிறார்கள்.
தற்போது இந்த படிப்பகம் சுற்றியுள்ள பகுதியில் சில சமூக விரோதிகள் மது அருந்திவிட்டு மது பாட்டில்களை தூக்கி வீசுவதும், உடைப்பதும், சிலர் மலம் கழிப்பதும், குப்பைகளை கொட்டுவதும் வழக்கமாக கொண்டுள்ளனர்.