வாஷிங்டன்: இந்தியாவுடன் எல்லைப் பதற்றத்தை சீனா அதிகரிப்பதாகவும், முரட்டுத்தனமாக நடந்து கொள்வதாகவும் அமெரிக்க வெளியுறவு துறை அமைச்சர் மைக் பாம்பியோ கண்டனம் தெரிவித்துள்ளார். டென்மார்க்கின் கோபன்ஹேகனில் நடந்த மாநாட்டில் இணைய தளம் மூலமாக வாஷிங்டனில் இருந்து அமெரிக்க வெளியுறவு துறை அமைச்சர் நேற்று முன்தினம் உரையாற்றினார். அவர் பேசியதாவது: சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சியானது, நேட்டோ போன்ற அமைப்புக்கள் மூலமாக செய்யப்படும் சுதந்திர உலகிற்கான அனைத்து முன்னேற்றங்களையும், நற்செயல்களையும் சீர்குலைக்கிறது. தனக்கு ஏற்ற புதிய விதிமுறைகளை உருவாக்க முயற்சிக்கிறது. சீன ராணுவம், உலகில் அதிக மக்கள் தொகை கொண்ட ஜனநாயக நாடான இந்தியாவுடன் எல்லை பதற்றங்களை அதிகரிக்கிறது.