பல்லடம்: திருப்பூர் அருகே மகனே சொத்துக்களை அபகரித்துக் கொண்டு ஏமாற்றியதால் ஆதரவற்ற பெற்றோர்கள் கருணை கொலை செய்ய கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். பல்லடம் அருகே உள்ள ராயர் பாளையத்தை சேர்ந்தவர்கள் சென்னியப்பன் - கருணையம்மாள் தம்பதியர். இவர்களது மகன் 10 ஆண்டுகளுக்கு முன்னர் சென்னியப்பனுக்கு சொந்தமான இரண்டு அரை ஏக்கர் நிலத்தை ஏமாற்றி எழுதி வாங்கிக்கொண்டதாக தெரிகிறது.