சென்னை: தமிழக பாஜ தலைவர் எல்.முருகன் வௌியிட்டுள்ள அறிக்கை: நீட் தேர்வு இந்தியா முழுவதும் நடைபெற்று வருகிறது. இதிலும் சராசரி விகித அடிப்படையில் பார்க்கும்பொழுது தமிழகத்தில் தான் அதிக எண்ணிக்கையில் மாணவர்கள் நீட் தேர்வில் பங்கேற்கிறார்கள். தமிழகத்தில் ஏறத்தாழ 84 ஆயிரம் மாணவர்கள் நீட் தேர்வு எழுத இருக்கிறார்கள். இதில் அரசு பள்ளி மாணவர்கள் ஆயிரக்கணக்கில் தேர்ச்சி பெற்றாலும் மதிப்பெண்கள் அடிப்படையில் போதுமான மருத்துவ இடங்களை பெற இயலவில்லை. இந்த நிலை நீட் தேர்வு அமல்படுத்துவதற்கு முன்பிருந்தே நீடித்து வந்தது குறிப்பிடத்தக்கது.
அரசு பள்ளி மாணவர்களுக்கு நீட் தேர்வில் உள் ஒதுக்கீடு: பாஜ தலைவர் எல்.முருகன் வரவேற்பு
- அரசாங்க பள்ளி மாணவர்கள்
- எல்.முருகன்
- ஜனாதிபதி
- பாஜக
- எல். முருகன் அரசு பள்ளி மாணவர்களுக்கு உள் ஒதுக்கீட்டுக்கான தேர்வு தேவை