குமரி மாவட்டம் வழியாக கேரளாவுக்குள் நுழைந்த 6 பேருக்கு தனிமை முகாம்

திருவனந்தபுரம்: பாறசாலை அருகே ரயில்வே தண்டவாளம் வழியாக கேரளாவுக்கு நடந்து சென்ற ராஜஸ்தானை சேர்ந்த 6 பேர் பிடிபட்டனர்.

கேரளாவில் நேற்று முன்தினம் குமரி எல்லையை ஒட்டி பாறசாலையில் ரயில்வே தண்டவாளம் வழியாக வடமாநிலத்தை சேர்ந்த 6 பேர் நடந்து ெசன்றனர். இதை கவனித்த அப்பகுதியினர் பாறசாலை போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக விரைந்து வந்த போலீசார் அவர்களை பிடித்து விசாரித்தனர்.

இதில் அவர்கள் ராஜஸ்தான் மாநிலத்ைத சேர்ந்தவர்கள் என்பதும், கொல்லத்தில் வியாபாரம் செய்து வருவதும் தெரியவந்தது.

இவர்கள் 6 பேரும் குமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் இருந்து களியக்காவிளை வரை வாகனத்தில் வந்துள்ளனர். அங்கிருந்து தண்டவாளம் வழியாக நடந்து சென்ற போது பிடிபட்டனர். இதையடுத்து அந்த 6 பேரையும் போலீசார் காரக்கோணத்தில் உள்ள தனிமை முகாமுக்கு அனுப்பி வைத்தனர். கேரளாவில் இதுபோல தொடரும் சம்பவங்கள் பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: