சென்னை: ஸ்ரீபெரும்புதூர் அதிமுக எம்எல்ஏ பழனிக்கு நேற்று முன்தினம் கொரோனோ தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் அவரது உறவினர்கள் 30 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. ஸ்ரீபெரும்புதூர் எம்எல்ஏ பழனிக்கு நேற்று முன்தினம் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் போரூர் அடுத்த மணப்பாக்கம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். எம்.எல்.ஏ.,விற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.