அகமதாபாத்: குஜராத் மாநிலம் பாவ்நகரில் வசிக்கும் ஒருவரின் ஒரு வயது மகள் வீட்டில் விளையாடும்போது, சமையல் அறையில் இருந்த பிரஷர் குக்கரை ஹெல்மெட் என நினைத்து தலையில் மாட்டிக் கொண்டு விளையாடினார். சிறிது நேரத்தில் தலையில் மாட்டியிருந்த குக்கரை வெளியே எடுக்க முடியவில்லை. கூச்சலிட்ட சிறுமி குக்கரை வெளியே எடுக்கமுடியாமல் அழுதார். அதிர்ச்சியடைந்த பெற்றோர் தங்களால் முடிந்தளவு போராடி சிறுமியின் தலையில் சிக்கிக் கொண்ட குக்கரை மீட்க முயன்றனர். ஆனால், சிறுமி அழுது கொண்டே கத்தியதால், பெற்றோர் சிறுமியை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.