ஜெயங்கொண்டம்: அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே தொடர் மின்வெட்டு காரணமாக தண்ணீர் பாய்ச்ச முடியாததால் நெற்பயிர்கள் கருக தொடங்கி உள்ளன. ஊரடங்கு தளர்வுக்கு பின்னர் ஜெயங்கொண்டம் அருகே முத்துவாஞ்சேரி உள்ளிட்ட இடங்களில் 200 ஏக்கர் இடங்களில் நெற்பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. பயிர்கள் நன்றாக வளர்ந்து வரும் நிலையில் மின்சாரம் பற்றாக்குறையால் வயல்கள் வறண்டு வெடித்து நெற்பயிர்கள் கருகுவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.